சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் வழியாக பயணித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) பயணி ஒருவர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் சிங்கையில் உள்ள வேறு எந்தவொரு தட்டம்மை பாதிப்புடனும் தொடர்புடையவர் அல்ல என்று சிங்கப்பூரின் தொற்று நோய்கள் நிறுவனம் (CDA) தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ38 விமானத்தில் இருந்த அந்த பயணி, பிப்ரவரி 9 ஆம் தேதி மாலை 7 மணியளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பல அமெரிக்க ஊடகங்கள் கடந்த பிப்ரவரி 19 அன்று செய்தி வெளியிட்டிருந்தன. (இந்த 2026 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நாட்டில் உறுதி செய்யப்பட்ட நான்காவது தட்டம்மை நோயாளியாக இந்த நபர் ஆனார்).
SIA passenger who travelled via Singapore affected – Important clarification issued by Singapore CDA.
ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய, சிங்கை CDA-ன் தொற்று நோய்கள் திட்டங்களுக்கான குழு இயக்குனர் லிம் போ லியான் பிப்ரவரி 23 அன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த “பயணி கம்போடியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பிப்ரவரி 9 அன்று விமானத்தில் வந்ததாகவும், சாங்கி விமான நிலையத்தில் சுமார் 2.5 மணி நேரம் ட்ரான்சிட்டில் இருந்ததாகவும். அவரது அறிகுறிகள் தோன்றிய தேதியின் அடிப்படையில், அவர் சிங்கப்பூருக்கு வரும் முன்பே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது,” என்று இணைப் பேராசிரியர் லிம் கூறினார், மேலும் பிப்ரவரி 20 அன்று இந்த வழக்கு குறித்து நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் குறிப்பிட்ட அந்த பயணி முழு நேரமும் Transit பகுதியில் இருந்தார், மேலும் சிங்கப்பூரில் அறியப்பட்ட வேறு எந்த வழக்குகளுடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 8 முதல் 14 வரையிலான வாரத்தில் ஒரு புதிய தட்டம்மை பாதிப்பு பதிவானதைத் தொடர்ந்து, 2026ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 14 தட்டம்மை பாதிப்புகளை சிங்கப்பூர் கண்டறிந்துள்ளது என்று பிப்ரவரி 20 அன்று வெளியிடப்பட்ட CDAவின் வாராந்திர தொற்று நோய்கள் புல்லட்டின் தெரிவிக்கிறது. பிப்ரவரி மாதம் மட்டுமே என்றாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்த எண்ணிக்கை இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர எண்ணிக்கையில் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் 27 பேரும், 2024 ஆம் ஆண்டில் 11 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது CDA.
சமீபத்திய தொற்றுகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, வைரஸ் பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பிப்ரவரி 6 முதல் இங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை தொற்று உள்ளவர்களை அவர்கள் இனி தொற்றுநோயிலிருந்து மீளும் வரை கட்டாயமாக தனிமைப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கான தொடர்பு கண்காணிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
பிப்ரவரி 15 அன்று உட்லேண்ட்ஸில் நடந்த ஹரி ராயா பஜார் விளக்கு ஏற்றும் விழாவில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யே குங், சிங்கப்பூரில் தட்டம்மை பரவுவது குறித்து “அதிகமாக கவலைப்பட தேவையில்லை” என்று கூறினார்.
ஏனென்றால் சிங்கப்பூரின் வயது வந்தவர்களில் 99 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று அவர் கூறினார். தட்டம்மை வைரஸ் காற்றுத் துளிகள் மற்றும் மூக்கு மற்றும் தொண்டை சுரப்புகளுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. தட்டம்மையின் அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் சொறி ஆகியவை அடங்கும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கிடையில் இந்தியாவில் நிபா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால் இனி அங்கிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு வெப்பபரிசோதனை செய்யப்பட்டது என்று அறிவித்துள்ளது.